திங்கள், 16 செப்டம்பர், 2013

70.இஸ்போகல் வித்து



  • இஸ்போகல் வித்தால் மலபந்தம்,சீத பேதி,வெள்ளை,வயிற்று வலி ,உஷ்ண இருமல்,நீர்க்கட்டு,முதலியவை குணமாகும்.

69.இன்புறா


  • இன்புறா வேருக்கு கப ஆதிக்கம்,பித்த கோபம்,காசம்,ஈளை,பித்த சுரம்,வயிற்று இரைச்சல் விக்கல் இவைகள் நீங்கும்.
  • இருமலுக்கு சஞ்சீவி மூலிகை இதுவாகும்.

68.இளநீர்








  • இளநீரை முறையாக பருகினால் வாதகோபம்,பித்த தோஷம்,வெப்பம்,தேக பாரிப்பு,கபாதிக்கம்,பையித்திய கோபம்,வமனம்,அதிசாரம்,ஆகியவை நீங்கும்.
  • மனத்தெளிவு,பார்வைத் தெளிவு,குளிர்ச்சி,மூத்திரப்பெருக்கம்,மலப்போக்கு,ஆகியவை உண்டாகும்.இது உஷ்ண சீதளத்தை உடையது.
  • குறிப்பு :

  • வழுக்கையாக உள்ள புதிய இளநீரை அருந்த பித்த பிர கோபம்  தீரும்.
  • பழைய இளநீராக இருப்பின் சலதோசத்தையும்,சீதள சம்பந்தமான பல ரோகங்களை உண்டாக்கும்.
  • காலை சாப்பாடுக்க்கு முன் இளநீரை உண்டால் பசி தீபனத்தை குறைக்கும்.இப்படி பல நாட்கள் குடித்து வந்தால் வயறு நோயை உண்டாக்கும்.
  • சாப்பிட்டபின் குடித்தால் வாத பித்த கோபம் தணியும்,தனி பித்த தோஷம் தணியும்.
  • மாலையில் குடித்தால் எரி கிருமிகள் ஒழியும்.
  • இன்னும் இதனால் நல்ல தேஜசும்,பசி தீபனம் உண்டாகும்.மலம் கிரமமாக போகும்.

67.இளங்கொட்டைபாக்கு







  • இளங் கொட்டைபாக்கை திண்பவர்க்கு அப்போது மட்டும் தொண்டைக்குள் கோழையடைக்கும்.வாதத்தையும்,நீங்காத கபத்தையும் விலக்கும்.
  • அருசி போக்கும்,பசி விலகாது.

66.இலைக்கள்ளி



  • இலைக்கள்ளியால் காதுவலி,பாலுண்ணி,மறுவு,விஷ பூச்சிகளின் விஷம்,சுவாச காசம்,ஈளை,சொறி,சிரங்கு,முதலியவை நீங்கும்.
  • இலைக் கள்ளிப்பால்,செங்கரப்பான்,கர்ண சூலை ,வாத விகாரம்,சூலை,விசர்ப்பிக் கிரந்தி,உள் விரணம்,இவற்றை நீக்கும்.

65.இலுப்பை










  • இலுப்பை நெய்யால் கரப்பான்,கடிவிஷம்,சிரங்கு,விரணம்,வன்மை,பொருந்திய இடுப்பு வலி,இவைகள் போகும்.இன்னும் நரம்புகளுக்கு வலிமை கொடுக்கும்.
  • இலுப்பை பிண்ணாக்கால் கடுவன்,விரணம்,கரப்பான் பீஜ வீக்கம்,திரிதோஷம்,எண்ணை சிக்கு இவைகள் போகும்.
  • இலுப்பை பூவால் பித்த சுரமும்,தாகரோகமும் நீங்கும்,இதனால் அதி பித்தமும்,பிரமையும் உண்டாக்கும்.
  • பார்வைக்கு அழகாக இருக்கும் இலுப்பை வித்தினால் அந்தர வாய்வு போகும்.இன்னும் மந்திரமில்லாமலே இந்த வித்தின் உபயோகத்தால் பல பூச்சிக்கடி விஷங்கள் நீங்கும்.
  • துவர்பாகிய இலுப்பை வேரால் விரணம்,புரை,வயிற்றுக்கடுப்பு,அதிமூத்திரம்,இரத்த கிராணி,அக்னி மந்தம்,அருசி,வாத சூலை,சகல சுரம், விந்து நஷ்டம், தாகம் தேக அயர்வு,நீங்கும்.தலைரோமங்களுக்கு ஆகாது ,உஷ்ணகாரி ஆகும்.








செவ்வாய், 10 செப்டம்பர், 2013

64.இலவம் பிசின்



  • இலவம் பிசினால் பிரமேக வெள்ளை,மூத்திரக் கடுப்பு,உட்சுரம்,கிரிச்சுரவேகம்,பேதி முதலியவை நீங்கும். 

63.இலவமரம்



  • உஷ்ண முள்ள  இலவமரத்தினால் வாத கிரிசரம்,எரி மூத்திரம்,தந்து மேகம்,இவை போம்.சுக்கிலமும்,ரச தாதுவும்,பலப்படும்.

62.இலவங்கப் பூ









  

  • இலவங்கப் பூவிற்குப் பித்தகோபம்,அதிசாரம்,சர்த்தி,உதிரக்கிராணி,ஆசனப்பிடுங்கல்,விந்து நட்டம் செவி நோய்,சிவந்த கருத்த மச்சங்கள்,விவுர்தம்,சம்விவுர்தம்,என்கிற ஆசிய வாதங்கள்,கண்ணில் பூப் படருதல்,மலக்கட்டும்,சௌக்கியம் உண்டாகும்.

61.இலவங்கப்பத்திரி



  • லவங்கப் பத்திரி பிரமேகம் ,சுரம்,குளிர் சுரம்,வெள்ளை,இரைப்பு,இருமல் ,பித்ததாகம்,வமனம்,விவுர்தசியம்,சம்விதார்சியம்,மேக பிடிப்பு,சுக்கில நட்டம்,வாய் கசப்பு,அரோசகம் இவற்றை நீக்கும். 

60.இலவங்கப்பட்டை



  • இலவங்கப்பட்டையானது சுக்கில நஷ்டம்,அதிசாரம்,பற்பல விஷங்கள்,வாயை யநுசரித்த வாதம்,தேவபூதமாகிய கிரகங்கள்,சிலந்தி விஷம்,பாம்பு விஷம்,சுவாஷா காசம்,தீர்க்கும்.

59.இலந்தை



  • இலந்தை பழத்தால் பித்த மூர்ச்சை,அரோசகம்,திரிதோஷவாந்தி,வலிவாதம்,பசிக்கும் போது இதை சாப்பிட்டால் வயிறு எரிச்சல் உண்டாகும்.
  • இலந்தை மர வேர்,அயர்ச்சி நீக்கும்.தீபாக்கினியை உண்டாக்கும்.
  • இந்த இலைக்கு சீல்மூலம்,ரத்தாதிசாரம்,தேக எரிச்சல்,வயிற்றுக் கடுப்பு, பித்தமேகம் தீரும்.  

58.இரேவல் சின்னி









  • இது ஒரு பேதிக்கிழங்கு ,விரோசனம்,பித்தாதிக்கம்,குடற்சுத்தி,வீரிய விருத்தி இவற்றை உண்டாக்கும். 

57.இருவி





  • காட்டில் விளைகின்ற இருவியால் வாத சீதளத்தினால் வலி,மயக்கம்,தாளக்கூடாத தலைவலி,சந்நி,அடுத்துவரும் விக்கல் முதலியன போகும்.

56.இருவாட்சி



  • உஷ்ணமும் ,கார்ப்புச்சுவையும்,உள்ள இருவாச்சியால் நேத்திரம் பிரகாசமும் ,தேகத்தில்,சுபாவ வாசனையும் வனப்பும் உண்டாம்.
  • தேகக்குத்தலும்,மூர்சரோகமும் போம்.