வெள்ளி, 30 செப்டம்பர், 2016

சீமைத்தக்காளிப்பழம்.(மூலிகை எண்.323.).


  • சீமைத்தக்காளிப்பழத்தினால் ரத்தத்திலும் குடலிலும் பற்றியுள்ள மாசுக்களை நீக்கி சுத்தப்படும்.
  • ஐம்புலன் அறிவு விஷேசப்படும்.
  • வயிற்றிலுள்ள விரணம்,
  • மலச்சிக்கல்,
  • பித்த உபரி முதலியன நீங்கும். 

சீமைச்சோம்பு.(மூலிகை எண்.322.).


  • சீமைச்சோம்பால் வயிற்றுவலி.
  • அக்கினி மந்தம்.
  • வயிற்றுப்பிசம். முதலியவை நீங்கும்.

சீமைச் செவ்வந்திப்பூ or சாமந்திப்பூ .(மூலிகை எண்.321.).


  • சீமைச் செவ்வந்திப்பூ அல்லது சாமந்திப்பூவால் ஸ்திரிகளுக்கு  தங்கிஉள்ள உதிர அழுக்கு வெளியாகும்.
  • சீதசுரம்,
  • அக்கினி மந்தம்,
  • மூர்ச்சை முதலிய பிணிகள் நீங்கும்.

சீந்திற் சர்க்கரை.(மூலிகை எண்.320.).


  • சீந்திற் சர்க்கரையால் இடைவிடாத பெரும் தாகம்,
  • எலும்புருக்கி ரோகம்,
  • ரத்தவாந்தி ரோகம்,
  • மதுமேகம்,
  • தேககாங்கை இவைகள் போகும்.
  • இது கசக்கும்,


சீந்திற் கிழங்கு.(மூலிகை எண்.319.).


  • சீந்திற் கிழங்கு.or சீந்தில் கொடிக்கு சர்வ மேகம்,
  • ரத்த பித்தரோகம்,
  • சுரம்,
  • மாந்தசுரம்,
  • பேதி,
  • பித்தகணம்,
  • ஆம்பில பித்த ரோகம்,
  • சர்ப்ப விஷம்,இவற்றைப் போக்கும்.
  • பசிதீபனம் உண்டாகும்.  

சீத்தாப்பழம்.(மூலிகை எண்.318.).


  • சீத்தாப்பழத்தால் பித்த சிலேத்தும தொந்தம்,
  • அக்கினி மந்தம் 
  • சித்த பிரம்மை உண்டாகும்.
  • சீதள உடம்புக்கு ஆகாது.

சிற்றுழா இலை.(மூலிகை எண்.317.).


  • சிற்றுழா இலையால் இரத்தமூலம்.
  • சீழ் மூலம்,
  • வெட்டை,முதலிய ரோகங்கள் நீங்கும்.

சிற்றீச்சம்பழம்.(மூலிகை எண்.316.).


  • சிற்றீச்சம்பழத்திற்கு சீதபேதி,
  • உழலை நோய்,
  • விரணம்,இவைகள் போகும்.
  • புத்திக்கு மலினம்(மழுங்கும்)
      உண்டாகும்.

வியாழன், 29 செப்டம்பர், 2016

சிற்றீச்சங்குருத்து.(மூலிகை எண்.315.).



  • சிற்றீச்சங்குருத்தால் ஸ்த்ரீகளுக்கு வயிற்றில் கட்டுப்பட்ட ரத்தவாத குன்மம் போகும்.
  • இன்னும் நல்ல பசியும் தேஜஸும் உண்டாகும்.

சிற்றாமுட்டி வேர்.(மூலிகை எண்.314.).



  • சிற்றாமுட்டி வேரினால் அஸ்திசுரம்.முதலிய பலவகை சுரங்களும்.
  • பித்த நோயும்,நீங்கும்,
  • கண்ணுக்கு ஒளியாம்.
  • இது தைலங்களுக்கு உதவும். 

சிற்றாமணக்கு நெய்.(சிறிய ஆமணக்கு எண்ணெய்).(மூலிகை எண்.313.).





  • சிற்றாமணக்கு நெய் பற்பல ஓளஷதங்களின் வெப்பங்களையும்,
  • வாயுவினால் மூலத்தில் உண்டாகின்ற உஷ்ணங்களையும்,நீக்கும்.
  • சிசுக்களை தாய் வளர்ப்பது போல் உடலை வளர்ப்பிக்கும்.

சிற்றரத்தை.(சிறிய அரத்தை).(மூலிகை எண்.312.).


  • சிற்றரத்தையால் சரத்தி.
  • பித்தம்.
  • கரப்பான்,
  • வாயு.
  • சிரரோகம்,
  • சிலேத்துமம்,
  • திரிதோஷம்,
  • சீதளம்,
  • பல சுரம்,
  • காசம் இவைகள் போகும்.

சிறு வள்ளிக்கிழங்கு.(மூலிகை எண்.311.).



  • சிறு வள்ளிக்கிழங்கால் மந்தம் ,
  • கரப்பான்,
  • சிலேத்துமவிருத்தி,
  • முளைமூலம் ஆகியன உண்டாகும்.
  • உதராக்கினி கெடும். 


ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

சிறுபுள்ளடி.(மூலிகை எண்.310.).


  • சிறுபுள்ளடியால், எண்வகை மாந்தம்.
  • சீதக்கட்டு,
  • வாதாலசகம்,ஆகியன நீங்கும்.
  • வற்றிய முலைப்பாலும் பெருகும். 

சிறுபீளை.(மூலிகை எண்.309.).

  • சிறுபீளைச் செடிக்குத் தேகம் வெளிறல்,
  • அசிர்க்கா ரோகம்,
  • வாதமூத்திரக்கிரிச்சரம்,
  • முத்தோஷம்,
  • மூத்திரச் சிக்கல்,
  • அஸ்மரி,
  • அந்திர பித்தவாதம்,
  • சோணிதவாதங்கள்,ஆகியன போகும். 

சிறுபசலைக்கீரை.(மூலிகை எண்.308.).


  • அதிக சுவையுள்ள சிறுபசலை,புணர்ச்சியில் இச்சையும்,
  • கபத்தை பெருக்கும்,
  • தாகத்தையும்,
  • சூட்டையும் தணிக்கும்,
  • மலத்தை இளகச் செய்யும்.

சிறுநாகப்பூ.(மூலிகை எண்.307.).



  • சிறுநாகப்பூவானது ஆண்குறியில் விழுகிற வெள்ளை,
  • மார்க்கந்தப்பிய ஆவிருதவாதம்,
  • காச ரோகம், இவற்றை விலக்கும்.

சிறுதேட்கொடுக்கு.or சிறுதேள்கொடுக்கு.(மூலிகை எண்.306.).


  • சிறுதேட்கொடுக்கால் நமைச்சிரங்கு,
  • விரணக் கரப்பான்,
  • கீல் வீக்கம்,
  • கொறுக்குமாந்தை,
  • ஒழுக்குப் பிரமேகம்,
  • பித்த வெள்ளை,
  • அஸ்திர சிராவம், ஆகியன நீங்கும்.  

சிறுசின்னி.(மூலிகை எண்.305.).


  • சிறுசின்னி இலைக்கு வண்டு கடி ,முதலிய கடி விஷங்கள் ,
  • இன்னதென்று தெரியக்கூடாத செந்துக்களின் விஷங்கள்,
  • இடுமருந்து,
  • பிரமேகம்,
  • கணச்சுரம்,
  • அக்கினி மந்தம்,ஆகியன போகும்.

சிறுகுறிஞ்சா வேர்.(மூலிகை எண்.304.).


  • சிறுகுறிஞ்சா வேரானது அற்பசெந்துக்களின் நஞ்சு,
  • வாத சுரம்,
  • வாத தோஷம்,
  • காசம்,
  • சுவாச காசம், இவற்றை போக்கும்.

சிறுகுறிஞ்சாக்கொடி.(மூலிகை எண்.303.).





  • சிறுகுறிஞ்சாக்கொடி வாதநோய்,
  • சீதபேதி,
  • மாதாந்த உதிரச்சிக்கல்,
  • அஸ்திதகசுரம்,
  • காணாகடி விஷம்,
  • வாத சுரம்,
  • சந்நி பாதசுரம்,
  • கப சுரம்,
  • பித்த ஜிக்வாகண்டகம்,
  • சந்ததசுரம்,
  • தாக ரோகம்,முதலியவை நீக்கும்.  

சிறுகுறிஞ்சா இலை.(மூலிகை எண்.302.).


  • பித்த குணமுள்ள சிறுகுறிஞ்சா இலை,அரை கடுவன்,
  • சிரங்கு,
  • காசம்,
  • விஷ பாகம்,
  • நாப்புண்,இவற்றை நீக்கும்.

சிறுகீரை.(மூலிகை எண்.301.).




  • சிறுகீரையால் தூம்பிரநோய்,
  • காசம் ,
  • படலம்,
  • பாதரச மருந்துகளின் வேகம்,
  • விரணம்,
  • மூத்திரகிரிச்சரம்,
  • வீக்கம்,
  • பித்த நோய்கள்,
  • நாவி,மற்றும் பாஷாண விஷங்கள் போகும்.
  • அழகு உண்டாகும்.