வியாழன், 28 ஆகஸ்ட், 2014

கலியாண முருக்கமரம்.(மூலிகை எண்:150.)



முள்முருக்கமரம் என்கிற கலியாண முருக்கமரத்தினால் வாந்தி,வயிற்று வலி,பித்த சுரம்,பித்தஜிக்வாகண்டகம்அட்ட (அட்டசரம் ) ஆகியவற்றை  நீக்கும்.மிக்க வலிமையைக் கொடுக்கும்.

கலியாணப் பூசணிக்காய்(மூலிகை எண்:149.)


கலியாணப் பூசணிக்காய்க்கு பித்த ரோகம். உட்காய்ச்சல், சாரமேகமூத்திரகிரிச்சரம், இடுமருந்து, பித்த சுரம், அஸ்திதாதுகதசுரம், பேய்ச்சொறி, பிரமேகம், ஆகியன போகும்.
வாததாதிக்கம் உண்டாகும்.    

கலப்பைக் கிழங்கு (மூலிகை எண்:148.)


கலப்பைக் கிழங்கால் பாம்பின் விஷமிறங்கும்.
இன்னும் தலைவலி,கழுத்து வலி,குட்டம்,வயிற்று வலி,சன்னி,கரப்பான்,முதலியவை நீங்கும்.

கர்ச்சூர் பழம் (பேரீச்சம் பழம்).(மூலிகை எண்:147.)




பேரீச்சம் பழத்தால் நீரைச் சுரப்பிக்கிற பித்த ரோகம்.மத ரோகம்,மூர்சை ரோகம்,சுரம்,கபம்,நீர்க் கோவை,தாகம்,ரத்த பித்தம்,மேக மூத்திரம்,வாயுலைப்பு,அருசி,மல பந்தம்,ஆகியன நீங்கும்.

கர்சூர்க்காய் (பேரீச்சங்காய்)(மூலிகை எண்:146.)

  • கர்சூர்க்காய் (பேரீச்சங்காய்)  உமிழ்நீரைப் பெருக்கையும்,மது நீரையும் போக்கும்.
  • பசியையும் புணர்ச்சியில் நிர்வாகத்தையும் உண்டாக்கும்.

தினம் 2 வேளை மென்று தின்றபின் பசுவின் பாலை அருந்தி வர நுரையீரலில் சேர்ந்துள்ள கபத்தையறுக்கும்.பசி தீபனத்தையும் தாது விருத்தியும் உண்டாக்கும்.