செவ்வாய், 30 டிசம்பர், 2014

காட்டாத்திப் பூ (மூலிகை எண்:171.)



  1. காட்டாத்திப் பூவுக்கு ரத்த கடுப்பு, 
  2. ரத்தாதிசராம்,
  3. வெளுத்த மலக் கழிச்சல் 
  4. பிரமேஹம் ஆகியன போகும்.
  5. இது துவர்ப்பு உள்ள சரக்கு.
  6. தேகத்தில் உள்ள வெப்பை யாற்றும் பேதியை கட்டும்.  

வியாழன், 11 செப்டம்பர், 2014

கடலைக்காடி(மூலிகை எண்:170.)






கடலைப் புளிப்பு என்கிற காடி பசி தீபனத்தை அதிகப்படுத்தும்,தவிர தேக அழலையையும் அதிகதாகம்,வாந்தி விக்கல் முதலியவற்றை பரிகரிக்கும்.

காடி நீர் (மூலிகை எண்:169.)



பழமையாகிய காடி சலத்தினால் பித்த மயக்கம்,சோபா ரோகம்,முதலிய சிற்சில ரோகங்களும்,அசீரணமும்,வாதாதி சாரமும் போகும்.உயர்ந்த மருந்துகளின் வேகத்தையும் தணித்துவிடும். 

காஞ்சொறி.(மூலிகை எண்:168.)




  • காஞ்சொறியினால் சுர வெப்பம்,மேகம்,சொறிசிரங்கு,கபம்,வாதம்,முதலியன நீங்கும்.
  • இந்த இனத்தில் பச்சை நிறத்தில் சிறுகாஞ்சொறி,பெருங்காஞ்சொறி என இரு விதங்கள் உண்டு.
  • சிவப்பு ,கறுப்பு என இரண்டு விதங்கள் உண்டு.

  • சிறுகாஞ்சொறி வேரானது சுவாச காசம்,திரிதோஷ சுரங்கள்,கரப்பான்,புண்,தாகம்.முதலிய வற்றை நீக்கும்.

  • பெருங் காஞ்சொறி வேரானது இருமல்,இறைப்பு,சீதசுரம்,ஆகியன போகும்.

  • செந்தொட்டிவேரினால் கீழ் வாதம்,விதாகம்,ரூட்சை,கடுவன்,இறைப்பு,கோழை ஆகியன போகும்.

  • கருஞ்காஞ்சொறி வேருக்கு பொடி இருமல்,ஜலஸ்ராவம்,சிலேத்துமரூட் சை,அன்கு ரோகம்.ஆகியன நீங்கும்.



காசினிக்கீரை (மூலிகை எண்:167.)



காசினிக்கீரை அஸ்தி தாதுகதசுரத்தையும் உதிரத்தழுக்கையும் வீக்கத்தையும் நீக்கும்.ரத்த விருத்தி செய்யும்.

காசாமரம்.(மூலிகை எண்:166.)




காசாமரப் பட்டையினால் உஷ்ணத்தினால் உண்டான நீர்சுருக்கு,வெள்ளை,பிரமேகம்,பேதி,சீதபேதி குணமாகும்.

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

காக்கை கொல்லி விதை.(மூலிகை எண்:165.)

  • காக்கை கொல்லி வித்தால் பேன்கள் நாசமாகும்.ஆனால் புண்களுள்ள இடங்களுக்கு பூசக்  கூடாது.அப்படி செய்தல் புண் வழியாக விஷமேறும். 

காக்கட்டான்,மாமூலி என்னும் வெள்ளை காக்கட்டான்.(மூலிகை எண்:164.)






  • காக்கட்டானை உட்கொள்ளப் பெருவயறு புரைக்குழல்,மலசலக் கட்டு,மாந்தம்,மலக்கிருமி சேர்க்கை ஆகியன நீங்கும்.

  • மாமூலி என்னும் வெள்ளை காக்கட்டான் வேருக்கு வெள்ளை,பிரமேகம்,தலை நோய்,சுரம்,கண்நோய் போகும்.

கஸ்துரி மஞ்சள்.(மூலிகை எண்:163.)




  • கஸ்துரி மஞ்சளுக்குப் பெருவிரணம்,கரப்பான்,கிருமிரோகம்,அக்னிமந்தம் போகும்.
  • வீரியமும் அறிவும் விருத்தியாகும்.


கற்பூர மணி அல்லது ககருபா.(கஹரூபா).(மூலிகை எண்:162.)







  • கற்பூர மணியால் மார்பு துடிப்பு,சயம்,வாந்தி,காமாலை,மேக சுரம்,வீக்கம் முதலியன நீங்கும்.
  • இன்னும் மூளைக்கு நல்ல பலமுண்டாகும். 


கற்பாசி (மூலிகை எண்:161.)



  • மழையால் பிறந்த கற்பாசியினால் நீடித்த மேகத்தையும்,அதிசாரத்தையும்,நீக்கும்.
  • வாசனை திரவியங்களில் ஒன்றாகும்.

கற்கண்டு (மூலிகை எண்:160.)


கற்கண்டினால் பல்லரணை,காசம் பற்பலசர்த்தி,அதிகரித்த சிலத்துமதோஷம்,வெப்பம்,ஆகியவை தீரும்.

கறுப்புப் பூலா (மூலிகை எண்:159.)








  • கறுப்புப் பூலாங் குச்சியினால் பல்துலக்க வீரிய விருத்தியுண்டாகும்.
  • இலை மூல ரத்தப் பெருக்கத்தைத் தடுக்கும்.
  • பழமானது உதிருகின்ற ரோமங்களை உதிர வொட்டாமல் செய்யும்.

கறிமுள்ளி (மூலிகை எண்:158.)




  • கறிமுள்ளியால் நெஞ்சிற் கோழைகட்டு காசம்,தமக சுவாசம்,சிலேஷ்ம சுரம்.ஆகியன நீக்கும்.
  • கறிக்கு உதவாத முள்ளிக் காயானது வாத பித்த கப தோஷங்களையும்,சுரம்,சுவாச ரோகம்  ஆகியவற்றை நீக்கும்.

கள்ளி முளையான் அல்லது சீமை எருக்கு.(மூலிகை எண்:157.)









புளிப்புச்சுவை உடைய கள்ளி முளையான் தீபனத்தை யுண்டாகும்.வாத விகுணத்தையும் பித்த தோஷத்தையும் மாற்றும்.
 

கள்ளிமரம் (மூலிகை எண்:156.)






கள்ளிமரத்தின் கொம்புகளால் வாதத்தில் உண்டான குடைச்சல்,சுவாச காசம்,சூலைப் பிடிப்பு,குடல் வாதம்,அண்ட வாதம்,முதலியன நீங்கும். 

கள்ளி மரப்பட்டை :



கள்ளி மரப்பட்டையினால் நரம்புச் சிலந்தியும்,கப வாத தொந்த சந்நிபாதமும் வாதப்பிரகோபமும் நீங்கும்.  

களிப்பாக்கு(மூலிகை எண்:155.)







களிபாக்கைத் தின்றால் நெஞ்சிற் கோழையும் அதிசாரமும் மன மகிழ்ச்சியும் உண்டாகும் பித்த அருசி ஒழியும்.

வியாழன், 4 செப்டம்பர், 2014

களாக்காய்.(மூலிகை எண்:154.)





களாக்காய் :
புளிப்பு உள்ள களாக்காய்க்குக் காதடைப்பு,தாகம்,பித்த தோஷம்,வமனம்,அருசி,ரத்த பித்தம், போகும்.இன்னும் இதனால் தீவிரமான பசி உண்டாகும்.

களாப்பழம்:
நிலக்களாப்பழத்தை மிகு பசியில் தின்றால் சீதரத்தமும்,அதிமந்தத்தில் தின்றால் நல்ல பசியையும் உண்டாக்கும்.தொண்டை வலியும்,தலைக்கனமும்  நீங்கும்.


களாப்பூ :

நேத்திரத்தில் உண்டான கரும்படலம்,வெண்படலம்,ரத்தப் படலம்.சதை படலம் முதலிய ரோகங்களும் விலக்கும்.