வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

குரோசானி ஓமம் (மூலிகை எண்:213).



குரோசானி  ஓமத்தால் 
  • அதிமூத்திரம்,
  • வாதாதிக்கம்,
  • விந்து நட்டம்,
  • விரணம்,
  • வாதாதிசாரம்,
  • உடற்கடுப்பு,
  • கரப்பான்,
  • நீங்கா கப நிறைவு,ஆகியன நீங்கும். 
  • அதிக மயக்கத்தை உண்டாக்கும்.

குருவிச்சிப்பூண்டு. (மூலிகை எண்:212).

குருவிச்சிப்பூண்டினால் 

  •  பெரும் வியாதி 
  • மலடு 
  • சிலேத்தும மேகம்,
  • கரப்பான்,
  • விஷ மாந்தம்,
  • சீதரத்தக்கிரகணி முதலியவை தீரும்.

குமரி . (மூலிகை எண்:211).

நாறும் கற்றாழைக்கு 

  • வாத மேகம்.
  • கபகோபம்,
  • கிருமிக்குத்தல்,
  • பெரும் வியாதி,
  • மூலம்,
  • உன்மாதம்,
  • பகந்தரம்,
  • வயிற்றுநோய்,
  • தினவுள்ள பித்த கிரிச்சரம் ஆகியன போகும். 

குப்பை மேனி (மூலிகை எண்:210).

குப்பை மேனி இலையால் 

  • தந்த மூலரோகம்,
  • தீச்சுட்ட புண்,
  • தவர சங்கம விஷங்கள்,
  • வயிற்று வலி,
  • வாத ரோகம்,
  • ரத்த மூலம்,
  • நமைச்சல்,
  • குத்தல்,
  • இரைப்பு ,
  • பீனிசம்,
  • கபாதிக்கம்,ஆகியவை நீங்கும். 

குந்திரிக்கம். (மூலிகை எண்:209).

குந்திரிக்கதினால் 

  • இருமல் ,
  • இரைப்பு ,
  • கிருஷ்ண குட்டம்,
  • மேக கட்டி,
  • தினவுடன் படருகின்ற படை,
  • சிரங்கு,
  • நீடித்த ரணங்கள் யாவும் நீங்கும்.

குத்துக்காற்சம்மட்டி வேர் (மூலிகை எண்:208)

பச்சையாய் உள்ள  குத்துக்காற்சம்மட்டி வேரினால் 

  • மகா வாதம் 24 ம் 
  • மேக கட்டிகளும்,
  • திமிர் வாதமும், 
  • மூர்ச்சையின் அயர்வும் போகும்.

குதிரைவாலி(மூலிகை எண்:207.)


குதிரைவாலியால்,

  • மூலக்கடுப்பு ,
  • அதிசாரம் ,
  • சுர வேகத்தால் வந்த நாவறட்சி,
  • சகனா விருத வாதம்,
  • வாதநோய்,
  • பிரமேகம்,
  • இருமல்,
  • கட்டி,
  • படுவன்,
  • நேத்திர மங்கல்,
  • கோழை,
  • அக்னிமந்தம்,
  • வாத கப தொந்தம்,
  • தினவு,ஆகியவை போம்.   

குதிரைக்குளம்படி இலை.(மூலிகை எண்:206.)

குதிரைக்குளம்படி இலையால் 

  • அசுவ வாதம்,
  • சன்னி,
  • தினவு,முதலியன நீங்கும்.  

குசும்பாச் செடி (மூலிகை எண்:205.)



குசும்பாச் செடியினால் 

  • சிறு நீர்க்கட்டு,
  • சொறி ,
  • வீக்கம் ,
  • சூலை ,
  • பிடிப்பு இவைகள் போகும். 

குங்குமப்பூ (மூலிகை எண்:204.)

குங்குமப்பூவினால்  
  • தாது நட்டம்,
  • நாவறட்சி,
  • குடல் வாதம்,
  • மேகநீர்,
  • கீழ் பிடிப்பு,
  • கபாதிக்கம்,
  • அதிக சுரம், 
  • பத்தியம்,
  • விகுண வாதம், 
  • மண்டைவலி,
  • கரு விழியில் படருகின்ற பூ,
  • கண்நோய்,
  • வாந்தி,
  • சலபீனிசம்,
  • காது மந்தம்,
  • நீர் ஏற்றம்,
  • வாயினிப்பு,
  • பிரசவ மலினம்,ஆகியவை நீங்கும்.   

வெள்ளைக் குங்கிலியம் .(மூலிகை எண்:203).


வெள்ளைக் குங்கிலியத்தால் 

  • மேகத்தால் பிறந்த நாளப்புண்,
  • உந்திக் கமல விரணம்,
  • சீழ் மேகம்,
  • உள்மூலவிரணம் இவைகள் நீங்கும்.

(இந்த இனத்தில் தூய வெண்மை நிறமுடையது (வெண் குங்கிலியம்) உள் மருந்துகளுக்கும்,அழுக்கு படிந்த பழுப்பு நிறமுடையது (கருங் குங்கிலியம்)  வெளி மருந்துகளுக்கு உபயோகப்படுத்தவும்.)