வியாழன், 1 ஜனவரி, 2015

காட்டுமாமரம்.(மூலிகை எண்:180.)



  • காட்டுமாமரத்தால் வயிற்றுவலி,
  • வாய்க்குமட்டல்,
  • ருசியின்மை 
  • பித்த வாயு முதலியன குணமாகும். 

காட்டு மல்லிகை வேர் (மூலிகை எண்:179.)

காட்டு மல்லிகை வேரினால் சர்வசுரம்,நாவறட்சி,அக்கினிமந்தம்,அதிசாரம்,விதாகம்,ஆகியன போகும்.இதன் வேர் அதிக கசப்பு சுவையை உடையது.

காட்டுப்பழுபாகல்.(மூலிகை எண்:178.)





  • மலையடுத்த காட்டுப்பழுபாகல் காய்க்கு அன்னமிறங்களும்,
  • நல்ல பசியும் உண்டாகும்,
  • பித்த காசமும்,
  • வாதம் முதலியன நீங்கும்.

காட்டுச்சீரகம்.(மூலிகை எண்:177.)


காட்டுச்சீரகத்தால்  உள்ளங்கையிலுள்ள கறுப்புப் புள்ளி,
பித்த மேகம்,பயித்தியம்,வாத குன்மம் இவைகள் போம்.குளிர்ச்சி உண்டாம். 

காட்டுக்கருணைக்கிழங்கு.(மூலிகை எண்:176.)




  • காட்டுக்கருணைக்கிழங்குக்கு வாதப் பிரமேஹம்,
  • முளை மூலம்,
  • சுர தோஷம்,
  • மிகு பசியும் கரப்பானும் உண்டாகும்.

காட்டீருள்ளி (காட்டு இருள்ளி or நரி வெங்காயம்)(மூலிகை எண்:175.)


  • நரி வெங்காயத்தால் சர்ப்ப விஷம்,
  • சீதளத்தாலுண்டாகிய கோழை.
  • சுவாசம் 
  • மூலம் 
  • பவுத்திரம் முதலிய ரோகங்கள் தீரும். 

காட்டிலந்தை .(காட்டு இலந்தை)(மூலிகை எண்:174.)



  • இதன் விறகு தினமும் குடிக்கின்ற குளிர்ச்சி எண்ணெய் காய்ச்சுவதற்கு விறகாகும்.
  • இதன் இலைக்குத் தேக எரிவு தீரும்.
  • இதன் கொழுந்துக்கு வயிற்று கடுப்பும் தீரும்.
  • இதன் பழத்திற்கு பித்த சாந்தம் உண்டாகும். 


காட்டாமணக்கிலை. (காட்டாமணக்கு இலை)(மூலிகை எண்:173.)






காட்டாமணக்கு இலை :
  • காட்டாமணக்கு இலையினால் மேகக்கட்டி,
  • புண் 
  • கரப்பான் 
  • பிலீகம் 
  • குன்மக்கட்டி 
  • விரணங்கள் 
  • சிலேத்தும வாதக்குத்தல்
  • சிரசு ரோகம் 
  • பெரும் விரணம்
  • கஷ்ட படுத்துகிற உள்மூலம் 
  • உள்ளுருக்கி
  • வெள்ளை முதலியவை போகும்.
  • சுக்கில விருத்தியுண்டாகும்.    

              காட்டாமணக்கின் பால் 

  • மூத்திரத் தோடு விழுகின்ற மேகம்
  • வெள்ளை 
  • வயிற்று வலி 
  • குறி விரணம் 
  • சரும கட்டி இவைகள் நீங்கும்.

காட்டாத்தி மரம் .(மூலிகை எண்:172.)



  • காட்டாத்தி மரத்திற்கு அதிசார பேதி,
  • அக்கினி மந்தம்,
  • இருமல் ,
  • தாவிர சங்கம விஷம் ஆகியன நீங்கும்.
  • இன்னும் விந்து ஊறும்.